அடாது மழை பெய்தாலும், விடாது தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தாலும் இன்று 9வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2021-11-18 03:27 GMT

தேனி மாவட்டம் முழுவதும் இன்று 337 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி்க்கு தொடங்கும்  இந்த முகாம், இன்று இரவு 7 மணி வரை நடைபெறும்.

இன்று ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை ஊசி போடுபவர்களும், இரண்டாம் தவணை ஊசி போடுபவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News