மாமன், மச்சான் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் திருவிழா

முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் மச்சான் உறவு வலுப்பெற ஒருவருக்கு ஒருவர், துடைப்பத்தால் அடித்துக் கொண்டு விநோத நேத்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-05-04 12:15 GMT

கோயில் விழாவில் ஒருவருக்கு ஒருவர் விளக்கு மாற்றால் அடித்துக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தும் காட்சி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி, தீச்சட்டி, பால் குடம், காவடி எடுத்து நேத்திக்கடன்களை செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மாமன், மச்சான் உறவுமுறை கொண்டவர்கள், தங்கள் உடலில் வர்ணம், சேறு பூசிக்கொண்டு தங்கள் மாமன், மச்சான் உறவுமுறை கொண்டவர்களை விளக்குமாற்றால் அடித்தனர். இப்படி உறவுகளுக்குள் விளக்குமாற்றால் அடித்துக் கொண்டால், உறவுமுறை வலுப்படுமாம். கிராமத்தில் மழை பெய்யுமாம்.

இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பிரபு கூறியதாவது:

இவ்விழா ஒரு முக்கிய விழாவாக தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாள் நடைபெறும் விழாவில் அம்மனுக்கு கரகம் எடுத்து வந்து அபிஷேக ஆரதனைகள் நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் உள்ள உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். மாமன் மைத்துனர்களிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களை தவிர்க்கவும் அனைவரும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு சேத்தாண்டி வேசமிட்டு, ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் மாறி, மாறி அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதன் மூலம் உறவுகளிடையே ஒற்றுமை வலுப்பெறும் என்ற ஐதீகம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதில் தாய்மார்களுக்கும் , வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கும் தொந்தரவு செய்வது இல்லை. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முளை பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலைய அடையும் என்று கூறினார். இந்த விநோத நிகழ்ச்சியினை கான மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

Tags:    

Similar News