காதலியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
Today Murder News -காதலியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Today Murder News - ஆண்டிபட்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா, 21. ஸ்வீட் கடை பணியாளரான இவர், ஜெ.சி.பி., எந்திரத்தின் டிரைவர் லோகிதாசனை காதலித்தார். பல மாதங்கள் காதலித்த பின்னர், தனது உறவு பெண்ணை முடிக்க லோகிதாசன் முடிவு செய்தார். இதனால் கடந்த 2011ம் ஆண்டு ஆண்டிபட்டி காமராஜ் பல்கலை கல்லுாரி ஆண்கள் கழி்ப்பறை அருகே தனது காதலி ஜெயப்பிரதாவை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம், கழுத்தினை நெறித்து கொலை செய்தார். ஆண்டிபட்டி போலீசார் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் லோகிதாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், லோகிதாசனுக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2