மினரல் வாட்டர் கம்பெனியில் ரூ.50 லட்சம் திருடியவர் கைது

Crime News in Tamil - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மினரல் வாட்டர் கம்பெனியில் ரூ.50 லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-05 07:24 GMT

Crime News in Tamil -தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அ.தி.மு.க.,வில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவரிடம் டிரைவராக வேலை பார்த்தவர் ஸ்ரீதரன். இவர் சில தினங்களுக்கு முன்னர் நாராயணனின் மினரல் வாட்டர் கம்பெனியில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று விட்டார். இந்த புகாரில் பெரியகுளம் டி .எஸ்.பி., கீதா தலைமையிலான போலீசார் ஸ்ரீதரனை தேடி வந்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் பதுங்கி இருந்த ஸ்ரீதரன் பெரியகுளத்தில் இருந்த தனது நண்பரிடம் மொபைல் போனில் பேசினார். இவரது போன் சிக்னலை கண்காணித்து வந்த போலீசார் உடனடியாக அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News