கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இரண்டாம் தாரமாக தன்னை திருமணம் செய்து, கணவன் கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-12 03:57 GMT

தேனி மாவட்டம், கூடலுார் முனுசாமிகோயி்ல் தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி அர்ச்சனா, 20. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. அச்சனா இரண்டாம் தாரமாக ரவிக்குமாரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குள்ளும் தகராறு இருந்து வந்துள்ளது. மனைவியை ரவிக்குமார் கொடுமை செய்துள்ளார். 

மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவரை அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் கடும் சங்கடத்திற்கு உள்ளான அர்ச்சனா வீட்டில் துாக்குமாட்டி இறந்து விட்டார். அவரது தாய் பிரியா கொடுத்த புகாரி்ல் கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News