தேனி பகுதியில் விதிகளை மீறி மரம் வெட்டுவது அதிகரிப்பு
Illegal Cutting Of Trees -தேனி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை சன்னாசியப்பன் கோயில் அருகில் மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.
Illegal Cutting Of Trees -ஜேசிபி இயந்திரம் மூலம் வன சட்ட விதிகளுக்கு புறம்பாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது. சன்னாசியப்பன் கோவில் அருகில் ஏற்கனவே போடி தீயணைப்புத்துறை, போடிநாயக்கனூர் வருவாய்த்துறை, தேனி காவல்துறை, தேனி வனத்துறை அளந்து கொடுத்து சர்வே செய்து போடப்பட்ட கல்கள் அகற்றப்பட்டுள்ளது. காப்பு வன பகுதியில் டன் கணக்கில் பச்சை மரங்கள் வெட்டப்பட்டு விறகுகளாக செங்கல் காலவாசல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என தமிழ்புலிகள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் வீர.பாண்டியன் மாவட்ட, போலீஸ் நிர்வாகங்களிடம் புகார் அளித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2