போடி அருகே வீடு புகுந்து நகை திருட்டு: போலீஸார் விசாரணை

Home burglary near Bodi and jewelery theft

Update: 2022-06-29 03:45 GMT

போடி விசுவாசபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்( 48.). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் வீட்டிற்குள் இருந்த வளையல், மோதிரம், தோடு உட்பட 12 பவுன் நகைகளையும், (போலீஸ் கணக்குப்படி இதன் மதிப்பு 3.75 லட்சம். உண்மை மதிப்பு இருமடங்கிற்கு மேல் அதிகம் இருக்கும்) ரூ.1.75 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றனர். போடி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News