ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி

ஆண்டிபட்டியில் டூ வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-07-02 14:07 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுாரை சேர்ந்தவர் பாண்டியராஜன், 56. விவசாயான இவர் தனது தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்திருந்தார். பறித்த வெண்டைக்காய்களை ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரில் உள்ள வெண்டைக்காய் ஏற்றுமதி கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். தானும் தனது டூ வீலரில் தொட்டப்பநாயக்கனுாரில் இருந்து திம்மரசநாயக்கனுாருக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை ரோட்டில் அமராவதி பண்ணை அருகே இவர் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் பால்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News