ஆண்டிப்பட்டி அருகே ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Crime News Tamil- ஆண்டிபட்டியில் கணவனுடன் டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்று விட்டனர்.

Update: 2022-06-27 05:18 GMT

Crime News Tamil-தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. டி.பொம்மிநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஓட்டல் பணி முடித்து இரவு கணவனும் மனைவியும் டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின் தொடர்ந்த மர்ம நபர்கள் மஞ்சுளா கழுத்தில் அணிருந்த நாலரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News