ஆற்றங்கரையில் படுத்து துாங்கியவர் தவறி ஆற்றுக்குள் விழுந்து பலி

பெரியகுளத்தில் வராக நதிக்கரையில் படுத்து துாங்கியவர், ஆற்றுக்குள் தவறி விழுந்து பலியானார்.

Update: 2022-04-10 01:45 GMT

பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சேது, 42. இவர் வராகநதிக்கரையில் உள்ள திட்டில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த துாக்கத்தில் புரண்டு படுத்தவர் ஆற்றுக்குள் விழுந்தார்.

பலத்த காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News