தேனி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு
தேனி மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 534 பேர் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சளிமாதிரிகளை கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தற்போதைய நிலையில் 3 பேர் மட்டுமே தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேனி அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.