தேனி மாவட்டத்தில் தொடர்மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Update: 2022-04-15 04:01 GMT
சுருளி அருவியில் நீராடும் பயணிகள், பக்தர்கள்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல் மழையில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது. சின்னசுருளி அருவி, சுருளிஅருவிகளில் நீர் வரத்து அதிகம் இருந்தாலும் அங்கு பயணிகள் குளிக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News