வருஷநாடு அருகே கல்லுாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வருஷநாடு அருகே உடல்நலக் குறைபாடு காரணமாக ஆடு மேய்க்க சென்ற கல்லாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-21 03:44 GMT

பைல் படம்.

வருஷநாடு அருகே உடல்நலக் குறைபாடு காரணமாக ஆடு மேய்க்க சென்ற கல்லாரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வருஷநாடு அருகே கொம்புக்காரன்புலியூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). இவர் தேனி வீரபாண்டியில் உள்ள கல்லுாரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இதனால் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அங்கு பிரச்னை தீவிரம் ஆகவே மனம் உடைந்த கார்த்திக் அங்கிருந்த மரம் ஒன்றில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News