நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள்..!

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீர் நிலைகளுக்கு அருகே கூட செல்ல வேண்டாம் என கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-11-24 05:50 GMT

பெரியாறு அணை பைல் படம்.


தேனி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பொதுமக்கள் நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம். மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இனி வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்பியுள்ளது.

வெள்ளப்பெருக்கின் போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை மற்றும் வைகை அணை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது.

நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலை அருகில் செல்ல வேண்டாம். மேலும், பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News