கர்னல் பென்னிகுயிக் 111வது நினைவு நாள் அனுசரிப்பு

முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக்கிற்கு இன்று 111வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-03-09 09:23 GMT

முல்லை பெரியாறு அணை கட்டிய பொறியாளர் கர்னல்பென்னிகுயிக் சிலைக்கு அவரது நினைவு நாளை ஒட்டி விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக்கின் 111வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது

இதனை அனுசரிக்கும் வகையில் முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், பாரத் கிஷான் சங்கம், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று லேயர்கேம்ப்பில்  உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முல்லை பெரியாறு அணை கட்ட அவர் பட்ட சிரமங்களையும், அந்த அணை மூலம் தமிழகத்தில் ஒரு கோடிப்பேருக்கு வாழ்வாதாரம் கிடைத்திருப்பதையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினர்.

Tags:    

Similar News