ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல்: கம்பத்தில் காவல் நிலையம் முற்றுகை

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-07 15:27 GMT

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து அந்த அமைப்பினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ரவிக்குமார் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ரவிக்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய கண்டித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News