சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கல்வியியல் மாநாடு

சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடந்தது.

Update: 2023-12-21 15:58 GMT

கல்வியியல் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சிவகாசி, எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் ‘தமிழ் மொழி வளர்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்புரிமையும்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடைபெற்றது.

அமெரிக்காவிலுள்ள தமிழ் அநிதம், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் உள்ளிட்ட பதினான்கு அமைப்புகள் இணைந்து இரண்டு நாட்கள் நடத்திய இம்மாநாட்டிற்குக் கல்லூரியின் முதல்வர் இரா. சுதாபெரியதாய் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலாளர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘இம்மாநாட்டில் எட்டு அமர்வுகளில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எழுதிய 78 கட்டுரைகள் வாசிக்கப்பெற்றன. இம்மாநாட்டில் தேசியத் தகவல் மையத்தின் இணை இயக்குநர் இ. இனியநேரு, தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, அருப்புக்கோட்டை சைவபானு சத்திரியக் கல்லூரி முதல்வர் முனைவர் கே. செல்லத்தாய், திண்டுக்கல், ஜி.டி.என் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ச. மாசிலாதேவி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இம்மாநாட்டின் நிறைவு விழாவில் உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கலந்து கொண்டு கட்டுரைகளின் ஆய்வுக்கோவையினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் அமெரிக்காவிலிருக்கும் தமிழ் அநிதம் அமைப்பு மற்றும் எஸ்.எப்.ஆர் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து கணினித் தமிழ் தொடர்பான கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மாநாட்டில் கட்டுரை வாசித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பா. பொன்னி வரவேற்புரை வழங்கினார். முடிவில் தமிழ் அநிதம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சுகந்தி நாடார் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News