தேனி அருகே மதுவிற்கு அடிமையான வாலிபர் தற்கொலை

மதுவிற்கு அடிமையான வாலிபர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-03 06:31 GMT

தேனி வடபுதுப்பட்டி முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது24.).மதுவிற்கு அடிமையான இவர், மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். குணமாகி வீடு திரும்பிய பின்னர், பின்னத்தேவன்பட்டியில் நடைபெறும் கோயில் விழாவிற்கு சென்றார். அங்கு தன் தாய் வீட்டில் தங்கினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News