மேகமலையில் கார் கவிழ்ந்து விபத்து: வட மாநில சுற்றுலா பயணிகள் காயம்

மேகமலையில் கார் மலைப்பாதையில் கவிழ்ந்த விபத்தில், வடமாநில சுற்றுலா பயணிகள் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.

Update: 2022-03-16 01:45 GMT

மேகமலையில் இருந்து சின்னமனுார் வரும் வழியில் சுற்றுலா பயணிகள் வந்த ஜீப் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் மதுரைக்கு சுற்றுலா வந்து விட்டு, அங்கிருந்து தேனி மாவட்டம், மேகமலை வந்தனர். மேகமலையில் தங்கி சுற்றி பார்த்த பின்னர், காரில் கீழே இறங்கிக் கொண்டிருந்ததனர். மலைப்பாதையில் 3வது வளைவில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் காரில் வந்த ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News