வெவ்வேறு சம்பவங்களில் தேனி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-03-16 01:00 GMT

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆசையன், 43. இவர் அன்னஞ்சி அருகே என்.ஜி.ஓ. காலனி வழியாக டூ வீலரில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் வெங்கலாகோயி்ல் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 42. கம்பத்திற்கு வேலைக்கு சென்ற இவர் போதையில் பஸ் படிக்கட்டில் நின்று பயணித்தார். சீலையம்பட்டி அருகே நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து இறந்தார். சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரை அறுக்கும் போது முதியவர் பலி: போடி புத்தர் பள்ளி தெருவை சேர்ந்தவர் முருகேசன், 75. தனியார் தோட்டத்தில் கீரை அறுத்துக் கொண்டிருந்த இவர், திடீரென இறந்து கிடந்தார். இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது மகள் சாந்தி, 43 போடி போலீசில் புகார் செய்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விமலாமணி, 82. இவரது கணவர் இறந்து 18 வருடங்கள் ஆகி விட்டது. குழந்தைகளும் இல்லை. பல்வேறு உடல்நல உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்த விமலாமணி தன் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News