முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க வலியுறுத்தல் : 4ல் பொங்கல் வைத்து போராட்டம்

முல்லை பெரியாறு அணையில் 152 அடிநீர் தேக்க வலியுறுத்தி கூடலுாரில் 4ம் தேதி பொங்கல் வைத்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Update: 2021-12-02 10:33 GMT

முல்லை பெரியாறு அணையில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பைல் படம்

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தி கூடலுாரில் வரும் டிசம்பர் 4ம் தேதி 152 பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் இட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும், 1300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் மதுரை குடிநீர் திட்டத்திற்கு லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதை நிறுத்தி, கால்வாய்கள் மூலம் குடிநீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகைகளை வலியுறுத்தி கூடலுாரில் வரும் டிசம்பர் 4ம் தேதி பொங்கல் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும். பெண்கள் பொங்கல் பானைகளுடன் மட்டும் வந்தால் போதும், பொங்கல் வைக்க தேவையான மூலப்பொருட்கள் அத்தனையும் விவசாய சங்கங்கள் வழங்கும் என கூடலுார் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கூடலுார், கம்பம் சுற்றுக்கிராம பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News