தேனி மாவட்டத்தில் தொடரும் கொரோனா சைபர் தொற்று

தேனி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக கொரோனா சைபர் தொற்று பதிவாகி வருகிறது

Update: 2022-02-27 09:00 GMT

ஒமிக்ரான் அலை கடந்த ஜனவரி மாதமே தேனி மாவட்டத்தில் முடிவுக்கு வந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது மக்கள் மிகவும் ரிலாக்ஸ் ஆகவே இருந்தனர். அப்படி இருந்தும் பிப்ரவரி மாதம் முழுக்க கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க த்திலேயே தொடர்ந்தது. அதுவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா தொற்று சைபர் என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை  தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News