அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

அரளிப்பட்டி அருகே விவசாய இடத்தில் அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்.

Update: 2021-08-09 11:13 GMT

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி. இவர் தன்னுடைய சொந்த விவசாய இடத்தில் தனது தேவைக்காக சவுடு மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசுக்கு வந்த தொலைபேசியில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் திருநாவுக்கரசு மேற்படி விவசாய நிலத்தில் இருந்த சவடு மண்ணை அள்ளிய ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார்.

இதனையடுத்து பறிமுதல் செய்த ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை எஸ்.வி.மங்கலம்  காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அரசு அனுமதியின்றி சவடு மண் அள்ளியதற்காக சதுர்வேதமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி பால முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News