இளையான்குடியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்

இளையான்குடியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-17 04:16 GMT

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆறுமுகம் மற்றும் அவையனை.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கீழையூர் காலனியில் நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கட்சி கொடி கம்பம் நடும் முயற்சியில் குழந்தை, பிரபு, அவையன்,ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரில் கொடிக்கம்பம் உரசியதில் கொடிக்கம்பத்தை பிடித்திருந்த நால்வரும் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர்.

இதில் குழந்தை மற்றும் பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த இளையான்குடி காவல் நிலையத்தினர் சம்பவம் இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் அவையனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த இருவரது உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News