சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது

திருப்பாச்சேத்தியில் வீட்டிற்கு முன் விளையாடிய 5 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது

Update: 2021-09-25 14:30 GMT

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைதாகினர்

திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்திருந்தது. இரவு வீட்டின் முன்னர் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் வசிக்கும் ராஜா, மதிமாறன், அய்யங்களை ஆகிய மூன்று இளைஞர்களும் சேர்ந்து அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு சென்று அருகே உள்ள சமுதாய கூடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சல் போட்டதும் அவர்கள் அந்த சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ராஜா, மதிமாறன், அய்யங்களை ஆகிய மூவரையும் கைது செய்து ரிமாண்ட்ற்கு அனுப்பினர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News