மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்

Update: 2021-04-19 11:59 GMT

நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டினார்.

சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து முளைத்து முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. மேலும் நெல் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை முறையாக சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்கு இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைத்து விட்டன .

மேலும் விவசாயிகள் நெல்கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கும் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து விடுகின்றன. இதனால் முறையாக நெல் கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டித்தர வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News