கூட்டுறவு கடன்சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்பதாக விவசாயிகள் புகார்

ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்கும் இந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்

Update: 2021-11-27 04:15 GMT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோட்டையூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்

கோட்டையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒவ்வொரு முறையும் பங்குத் தொகை கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோட்டையூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு 10 சதவீத பங்கு தொகை பிடித்தம் செய்து கொண்டு கடன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது . இந்நிலையில், கடன் கட்டி முடித்த பிறகு, பங்குத்தொகை கடன் சங்கத்தில் நிலுவையில் இருந்த போதிலும், மீண்டும் புதியதாக விவசாயிகள் கடன் பெறுவதற்கு புதியதாக மீண்டும் பங்கு தொகை கேட்பதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மீண்டும் பங்கு தொகை கேட்பதால் பங்கு தொகை குறித்த ரசீது வழங்குமாறு அதிகாரியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால்,  இது குறித்து ஏதும் பதில் இல்லாததால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒவ்வொரு முறையும் பங்குத்தொகை கேட்கும் இந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News