ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-16 11:37 GMT

சாராயம் விப்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கணேசன்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே,  லேடி சீட் பகுதியில் சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ்விற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது லேடிசீட் பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவது கண்டுபிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து  10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார், கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து கணேசன் மீது ஏற்காடு காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்து சங்ககிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News