சேலம் மாநகரில் பலத்த மழை

வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2021-04-23 17:45 GMT

சேலம் மாநகரில் பலத்த மழை. வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது அதே வேளையில் அடிக்கடி மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் காலை முதல் வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்களுக்கு மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்த நிலையில் இன்று மாலை சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது சேலம் ஜங்ஷன், சூரமங்கலம், ஐந்துரோடு, அஸ்தம்பட்டி, ஏற்காடு அடிவாரம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதையும் பார்க்க முடிந்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. 

Tags:    

Similar News