இன்று முதல் இ பாஸ்: வாகன தணிக்கை தீவிரம்

இன்று முதல் மீண்டும் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

Update: 2021-05-17 12:15 GMT

ஊரடங்கின்போது பொதுமக்கள் பயணம் செய்வதற்கு இன்று முதல் மீண்டும் இபாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூரில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இ பாஸ் வைத்துள்ள வாகன ஓட்டிகள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இ பாஸ் இல்லாத வாகன ஓட்டிகளை மாவட்ட எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதேபோல சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி, தொப்பூர், ஆச்சாங்குட்டப்பட்டி, தலைவாசல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News