'பயப்படாம ஒட்டு போட வாங்க' சேலத்தில் கொடி அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக சேலத்தில் மாநகர காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

Update: 2021-03-04 06:00 GMT

சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக சேலத்தில் மாநகர காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் இடையே நிலவி வரும் அச்சத்தை போக்கவும், சட்டம் - ஒழுங்கை காப்பாற்றவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இ தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சேலம் மாநகர போலீசார் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் என மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர். சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு அப்புசெட்டி தெரு, திருச்சி மெயின் ரோடு வழியாக சென்று, குகை வரையிலான 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதற்கு சேலம் நகர காவல் உதவி ஆணையாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் கைகளில் துப்பாக்கிகளுடன் அணிவகுத்து சென்றனர்.

Tags:    

Similar News