கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம்.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம். கொலையா என போலீசார் விசாரணை;

Update: 2021-03-12 18:15 GMT

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாஷா.  இவரது மனைவி உமையா பானு (45). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் திருமணம் ஆகி சென்றுவிட்டார் இரண்டாவது மகள் தமீனா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஷா தனது மகளை  கல்லூரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது உமையா பானு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் அடித்து கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. உமையாபானு வீட்டுக்கு அடையாளம் தெரியாத நான்கு பேர் வந்து சென்றது தெரியவந்தது.

இந்த நபர்கள் குறித்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News