கூட்டுறவு தந்தை சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா

கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா சேலத்தில் கொண்டாடப்பட்டது.;

Update: 2021-02-04 11:15 GMT

சேலம் கூட்டுறவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் தேனி மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம்.

கூட்டுறவு பண்டகசாலை காரியதரிசி, தலைவர் மற்றும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் மோகனூர் மற்றும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிறுவனர் ஆவார். மாநில கூட்டுறவு வங்கி இயக்குனர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிறுவனர் திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது நூற்றாண்டு விழா சேலத்தில் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியம் சிலைக்கு அவரது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News