சேலத்தில் நடிகா் விவேக்கிற்கு மரக்கன்று நட்டு அஞ்சலி

நடிகா் விவேக் மறைவை முன்னிட்டு, சேலத்தில் மரக்கன்று நட்டு இளைஞா்கள் அஞ்சலி செலுத்தினா்.

Update: 2021-04-18 10:29 GMT

நடிகா் விவேக் மறைவையொட்டி, சேலம் மாநகராட்சிப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வரும் சேவகன் அறக்கட்டளையினா் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மரக்கன்று நட்டனா். பின்னா் நடிகா் விவேக்கின் புகைப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். சேலம் மாநகராட்சிப் பகுதி முழுவதும் மரங்களை நட சேவகன் அறக்கட்டளையினா் முடிவு செய்துள்ளனா்.

Tags:    

Similar News