சேலம்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-11 05:57 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, விலை குறைப்பு செய்யாத மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது. 

சேலம் அரசு கலைக்கல்லூரி எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்து, மாவட்ட தலைவர்  பாஸ்கர் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில்  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  பொதுமக்களின் நிலைமை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு  தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வருவதாகவும் இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் இதில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News