பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-10 06:45 GMT

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும், மக்கள் நீதி மய்யம் சார்பில், இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவ்வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்தும்; விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பதிலாக விறகு அடுப்பில் சமையல் செய்து, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags:    

Similar News