பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சேலம் வடக்கு எம்.எல்.ஏ.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ராஜேந்திரன், தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2021-07-27 06:45 GMT

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ராஜேந்திரன், தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு,  பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் சிறப்பு முகாம்களை நடத்திம்  மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

இதன்படி,  சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன், தனது தொகுதிக்குட்பட்ட பொன்னம்மாபேட்டை, அம்மாப்பேட்டை, அரிசிப்பாளையம், சாமிநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றார். சட்டமன்ற உறுப்பினரிடம் ஏராளமானோர் மனு கொடுத்தனர். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று,  சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உறுதியளித்தார்.

Tags:    

Similar News