வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சேலத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-26 08:14 GMT

சேலம் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு,  மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மூன்று  வேளாண் சட்டங்களை  திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு  சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று கில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர், சேலம்  பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News