திமுக ஆ.ராசாவின் பேச்சால் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன் முதலமைச்சரின் தாயார் குறித்து பேசி விட்டு தற்போது ஆ.ராசா மன்னிப்பு கேட்பது மனமுவந்து அல்ல , அது ஒரு சூழ்ச்சி என்றார். இது திமுகவின் வாடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.ஆ.ராசாவின் பேச்சால் தமிழகத்தில் பெண்கள் கொதிப்பு அடைந்துள்ளதாகவும் இதனால் ஏற்பட்டுள்ள இமாலய எழுச்சி அதிமுகவிற்கு அனைத்து தொகுதியிலும் வெற்றியை பெற்று தரும் என்றும் தெரிவித்தார்.