உலக புற்றுநோய் தினம்: விழிப்புணர்வு பேரணி
உலக புற்றுநோய் தினத்தையொட்டி சேலத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
உலக மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து துவங்கிய இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு புற்றுநோயை தடுப்பது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாநகரின் பிரதான சாலைகள் வழியாக சென்ற பேரணி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.