சேலம் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு: நோயாளியின் உறவினர்கள் ஆத்திரம்

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் தீவிர சிகிச்சை பிரிவின் நுழைவு வாயில் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-20 09:30 GMT

தீவிர சிகிச்சை பிரிவின் நுழைவு வாயிலில் உடைக்கப்பட்ட கண்ணாடி.

ஈரோடு மாவட்டம் சீரங்கபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார். மீன்பிடி தொழிலாளியான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அதிவேகமாக வந்த ஆட்டோ மோதியதில் முதுகு தண்டுவட பகுதியில் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமாருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உரிய சிகிச்சை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த குமாரின் மருமகன் பூபதி அவசர சிகிச்சை பிரிவிற்கு நுழைந்து நுழைவு வாயில் கண்ணாடியை உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News