சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து சேலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2022-03-10 08:15 GMT

இனிப்பு கொடுத்து கொண்டாடிய பாஜகவினர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாஜகவின் வெற்றியை பகிர்ந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News