சேலத்தில் பாமக வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா பால் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார்.

Update: 2022-02-16 12:45 GMT

சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சைக்கிளில் சென்று மாம்பழம் சின்னத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் 22 வயதான இளம் பாமக கட்சி வேட்பாளர் கோகிலா பால் மார்கெட் அப்புசெட்டி தெரு பகுதியில் சைக்கிளில் சென்று பாதசாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News