மனைவியின் கள்ளக்காதல் ஆதாரத்துடன் மகனை மீட்க ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் மனு

ஆர்.ஐ.,யாக பணிபுரியும் மனைவியின் கள்ளக்காதல் போட்டோவுடன் மகனை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் மனு அளித்துள்ளார்.

Update: 2022-01-24 12:45 GMT

மகனை மீட்டுத்தரக்கோரி மனு அளிக்க வந்த மணிகண்டன்.

சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும், சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்வேதா என்பவரும் கடந்த 2013ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு ஸ்ரீ சுவேதாவிற்கு நீலகிரி மாவட்டம் கூடலூரில் கிராம நிர்வாக அலுவலராக அரசு பணி கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது அவர் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இதனிடையே வருவாய்த் துறையில் பணிபுரியும் சில ஆண்களுடன் ஸ்ரீ ஸ்வேதாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிந்துகொண்ட அவரது கணவர் மணிகண்டன் கண்டித்தபோது கோபமடைந்த ஸ்ரீஸ்வேதா விவாகரத்து கேட்டு ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஸ்ரீ ஸ்வேதாவின் உறவினர்கள் மணிகண்டனின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களது 8 வயது மகனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மகனை சந்திக்க முடியாமல் தவித்த மணிகண்டன் கள்ளகாதல் விவகாரத்தில் தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சத்தில் மனைவியிடம் இருந்து மகனை மீட்டுத் தர கோரி பெற்றோருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார்.

மேலும் தனது மனைவி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் கூடலூரில் இருந்து பணி மாறுதல் பெற்று தற்போது ஈரோட்டில் ஆர்டிஓ-வாக பணிபுரியும் கள்ளக்காதலனுடன் பேசிய உரையாடல் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News