மேட்டூர்: நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை- பரபரப்பு

மேட்டூர் அருகே, நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தற்கொலை. செய்து கொண்டது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2021-09-12 04:15 GMT

தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) ஏற்கனவே இரண்டுமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வந்தார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. 

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷுக்கு, மேச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு மையம் என ஹால் டிக்கெட் வந்திருந்த நிலையில், மாணவன் தனுஷ் தேர்வு அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை தனது வீட்டின் முற்றத்தில், யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உறவினர்கள், தனுஷை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கருமலைக்கூடல் காவல்துறையினர், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News