மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 85 கன அடியாக அதிகரிப்பு

Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-04-10 03:15 GMT

Salem News- மேட்டூர் அணை.

Salem News, Salem News Today- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (9ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 74 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (10ம் தேதி) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் மற்றும் கால்வாய் பாசனத் தேவைக்காக 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 57.58 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 57.30 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 22.71 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News