கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது.

Update: 2021-07-10 13:15 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை இன்று நடைபெற்ற பருத்தி மற்றும் எள் டெண்டரில், கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி சுற்றுவட்டார விவசாயிகளால் 100 மூட்டை எள் கொண்வரப்பட்டு வெள்ளை எள் ரூ 77 முதல் ரூ 96.60 வரையிலும், சிகப்பு எள் ரூ 75 முதல் ரூ 93 வரையிலும் விலை தீர்ந்து ரூ 9 லட்சத்திற்க்கு விற்பனை நடைப்பெற்றது.

பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, மாவட்ட விவசாயிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். சுமார் 6000 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 700 லாட்டுகளாக  வைத்து ஏலம் விடப்பட்டது.

சுரபிரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ 7500 முதல், அதிகப்பட்சமாக ரூ9119 வரையிலும், BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ 6450 முதல் அதிகபட்சமாக ரூ 7351 வரையிலும் விலை தீர்ந்து மொத்தம் ரூ 1.59 கோடிக்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 17.07.21 சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News