தப்பி ஓடிய கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

சேலம் அருகே காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய நபரை தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-01-26 10:30 GMT

சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற நபரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். மற்றொரு வழக்கு விசாரணைக்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் நாமக்கல் சிறைச்சாலைக்கு திரும்பும்போது சக்ரவர்த்தி காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தப்பி ஓடிய சக்கரவர்த்தியை தனிப்படை போலீசார் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து சேலம் அழைத்து வரப்பட்ட சக்கரவர்த்தியை சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சக்ரவர்த்தி தப்பி ஓடும்போது தாக்கியதில் ராசிபுரம் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் காயமடைந்தார்.

Tags:    

Similar News