சேலம் திமுக எம்பி பார்த்திபனுக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் தொகுதி எம்.பி., பார்த்தீபன், அங்குள்ள அஸ்தம்பட்டி எம்.டி.எஸ் நகர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாக சேலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வந்த திமுகவின் கிராமசபை கூட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு கூட்டங்களுக்கு தொடர்ந்து சென்று குறைகளை கேட்டறிந்து வந்துள்ளார்.இந்நிலையில், எஸ்.ஆர் பார்த்திபன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.