சோளிங்கரில் வாரச்சந்தை: எம்ஏல்ஏ திறந்து வைத்தார்

சோளிங்கர் அடுத்த கொளத்தேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தையை முனிரத்தினம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2022-03-06 12:38 GMT

சோளிங்கர் அருகே வார சந்தையை திறந்து வைக்கும் எம்எல்ஏ முனிரத்னம் 

சோளிங்கர் அடுத்த கொளத்தேரி ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டிடம், வாரச்சந்தை திறப்பு விழா மற்றும் செடி நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிபாரதி என்கின்ற சுப்பிரமணி தலைமை தாங்கினார், ஒன்றிய குழுத்தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்எல்ஏ கலந்து கொண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வழங்கி வாரச்சந்தையை தொடங்கி வைத்தார். பின்னர் பல வகை மரக்கன்றுகளையும்  நட்டார்.

நிகழ்ச்சியில் சோளிங்கர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் அன்பரசி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News